எரிசக்தி நெருக்கடியால் பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் உள்ளிட்ட நினைவு சின்னங்களுக்கு இரவில் மின்சாரம் நிறுத்தம்.!

0 2963

எரிசக்தி நெருக்கடியால் பிரான்ஸ் நாட்டில் மின்சாரத்தை சேமிக்க ஈபிள் கோபுரம் உள்ளிட்ட புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களுக்கான மின்சாரம் குறைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போர் மற்றும் காலநிலை மாற்ற பிரச்சனை காரணமாக இந்த எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த பாரீஸ் நகர மேயர் அன்னே ஹிடால்கோ, நகரில் இதுவரை அதிகாலை 1 மணி வரை மின்விளக்குகள் ஒளிர்ந்து வந்த நிலையில், வருகின்ற 23 முதல் சிட்டி ஹால் மற்றும் நகரில் உள்ள அருங்காட்சியகங்களில் இரவு 10 மணிக்கே விளக்குகள் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

ஈபிள் கோபுரத்தில் இரவு 9.45 மணிக்கு அனைத்து விளக்குகளும் அணைக்கப்படும் எனவும், இதன் மூலமாக மின்சார நுகர்வு 10 சதவீதம் குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments